• 6 years ago
காதல் திருமணம் செய்து கொண்ட 6 மாதத்தில் கணவன் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் இளம் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துத்துக்குடி மாவட்டம் தேய்குளம் அருகில் உள்ள பெருமாள்குளத்தை சேர்ந்த சிவபெருமாளின் மகள் பத்மா என்ற பத்திரகாளி, 21. அதே ஊரைச்சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆன நிலையில் நேற்று பத்மா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணம் கணவன் வீட்டார் 20 பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் கேட்டு கொடுமைபடுத்தியதுதான் என்று பத்மா கடிதம் எழுதி வைத்துள்ளார்.

In a shocking incident a newly married woman was allegedly burnt alive near Thoothukudi.Sathankulam police pointed out that the letter saying that her love husband Mohanrajaj and his mother's dowry were responsible for her death and to arrest my brother and my father.

Category

🗞
News

Recommended