திருச்சி அதிமுகவினர், அமைச்சர்கள் மற்றும் திமுகவினரோட தொடர்புல இருக்குறதா எனக்கு தெரியவந்திருக்கு, இனியும் நிறுத்திக்கலனா சும்மா விட மாட்டேன் என நேரடியாகவே எச்சரித்து அதிமுக நிர்வாகிகளுக்கு ஷாக்கை கொடுத்துள்ளார் இபிஎஸ்.
அதிமுகவில் 2026 தேர்தலை குறிவைத்து வேலைகள் வேகமெடுத்துள்ள நிலையில், நிர்வாக வசதிக்காக 82 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, கட்சி நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் உரையாடி வருகிறார். அந்தவகையில் திருச்சி அதிமுகவினருடன் உரையாடிய இபிஎஸ், நிர்வாகிகளிடம் கடுகடுத்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “திருச்சி அதிமுக நிர்வாகிகள் உள்ளூர் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருகிறது. திமுகவினருடன் தொடர்பில் இருக்கலாம் என்பதை உடனடியாக மறந்து விடுங்கள். திமுகவினரோடு கைகோர்த்து இருப்பதால் அதிமுக முறையாக செயல்படவில்லை என தெரிகிறதுஜெயலலிதா இருந்தபோது திருச்சி அதிமுகவின் கோட்டையாக இருந்தது. இனியும் திமுகவினருடன் தொடர்பில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள். இதுதான் திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு கடைசி எச்சரிக்கை என கோபமாக பேசியுள்ளதாக சொல்கின்றனர்.
திருச்சி மாவட்டம் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் கோட்டையாக இருக்கிறது. அதிமுகவினர் சிலர் திமுகவினருடன் தொடர்பில் இருந்து கட்சிக்காக முறையாக வேலை பார்ப்பதில்லை என்றும், கட்சியின் மற்ற நிர்வாகிகளை கண்டு கொள்வதில்லை என்றும் இபிஎஸ் காதுகளுக்கு சென்றுள்ளது. அதனால் திருச்சி அதிமுகவினரை ரேடாரில் வைத்திருந்த இபிஎஸ், நிர்வாகிகளுடம் பேசும் போது சூடாகி எச்சரிக்கை கொடுத்துள்ளார். ஏற்கனவே தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் நேரத்தில், மாவட்ட அளவில் நடக்கும் உட்கட்சி மோதலையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என இபிஎஸ் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாக சொல்கின்றனர்.
அதன் வெளிப்பாடு தான் நிர்வாகிகளுக்கு நேரடியாகவே வார்னிங் கொடுப்பதை பார்க்க முடிகிறது.
இபிஎஸ் பேசியதை கேட்டதும் அதிர்ந்து போன அதிமுக நிர்வாகிகள், இனி நாங்கள் சிறப்பாக செயலாற்றி அதிமுகவை 2026ல் வெற்றி பெற வைப்போம் என இபிஎஸ்-க்கு வாக்கு கொடுத்துள்ளனர்.
அதிமுகவில் 2026 தேர்தலை குறிவைத்து வேலைகள் வேகமெடுத்துள்ள நிலையில், நிர்வாக வசதிக்காக 82 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, கட்சி நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் உரையாடி வருகிறார். அந்தவகையில் திருச்சி அதிமுகவினருடன் உரையாடிய இபிஎஸ், நிர்வாகிகளிடம் கடுகடுத்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “திருச்சி அதிமுக நிர்வாகிகள் உள்ளூர் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருகிறது. திமுகவினருடன் தொடர்பில் இருக்கலாம் என்பதை உடனடியாக மறந்து விடுங்கள். திமுகவினரோடு கைகோர்த்து இருப்பதால் அதிமுக முறையாக செயல்படவில்லை என தெரிகிறதுஜெயலலிதா இருந்தபோது திருச்சி அதிமுகவின் கோட்டையாக இருந்தது. இனியும் திமுகவினருடன் தொடர்பில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள். இதுதான் திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு கடைசி எச்சரிக்கை என கோபமாக பேசியுள்ளதாக சொல்கின்றனர்.
திருச்சி மாவட்டம் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் கோட்டையாக இருக்கிறது. அதிமுகவினர் சிலர் திமுகவினருடன் தொடர்பில் இருந்து கட்சிக்காக முறையாக வேலை பார்ப்பதில்லை என்றும், கட்சியின் மற்ற நிர்வாகிகளை கண்டு கொள்வதில்லை என்றும் இபிஎஸ் காதுகளுக்கு சென்றுள்ளது. அதனால் திருச்சி அதிமுகவினரை ரேடாரில் வைத்திருந்த இபிஎஸ், நிர்வாகிகளுடம் பேசும் போது சூடாகி எச்சரிக்கை கொடுத்துள்ளார். ஏற்கனவே தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் நேரத்தில், மாவட்ட அளவில் நடக்கும் உட்கட்சி மோதலையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என இபிஎஸ் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாக சொல்கின்றனர்.
அதன் வெளிப்பாடு தான் நிர்வாகிகளுக்கு நேரடியாகவே வார்னிங் கொடுப்பதை பார்க்க முடிகிறது.
இபிஎஸ் பேசியதை கேட்டதும் அதிர்ந்து போன அதிமுக நிர்வாகிகள், இனி நாங்கள் சிறப்பாக செயலாற்றி அதிமுகவை 2026ல் வெற்றி பெற வைப்போம் என இபிஎஸ்-க்கு வாக்கு கொடுத்துள்ளனர்.
Category
🗞
News