திருப்பதி ஏழுமலையானை 1 மணி நேரத்தில் பார்க்க ஆதார் இருந்தால் போதும்- வீடியோ

  • 7 years ago
திருப்பதி ஏழுமலையானின் தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம் ஆதார் கார்டு வைத்திருக்கும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் வரப்பிரசாதி. ஏழுமலையானை தரிசனம் செய்தார் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன்காரணமாகவே நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்க நேரிடுகிறது. அதே போல 300 ரூபாய் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 3 முதல் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.


திருப்பதியில் கூட்டத்திற்கு ஏற்ப இலவச தரிசனத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். இதனால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும்வகையில் புதிய நடைமுறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பக்தர்களின் ஆதார் எண் மூலம் நேரம் ஒதுக்கீடு செய்து 1 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The Tirumala Tirupati Devasthanams (TTD) is toying with the idea of making Aadhaar mandatory for free dharsan easy dharsan for Perumal.

Recommended