'பத்மாவத்' படம் வருமா வராதா?- வீடியோ

  • 6 years ago
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உருவாகியிருக்கும் படம் 'பத்மாவத்'. பத்மாவத் படம் ரிலீஸானால் தீயில் குதிப்போம் என ராஜஸ்தானில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டு ராஜஸ்தான், மத்திய பிரதேச உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 'பத்மாவத்' படத்தில் சித்தூர் மகாராணியை தவறாகச் சித்தரித்துள்ளதாக கூறி ராஜபுத்ர அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி அளித்த பின்னரும் படத்தை திரையிட விட மாட்டோம் என எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். பத்மாவத் படத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை நிறுத்திவைத்து படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டு ராஜஸ்தான், மத்திய பிரதேச உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேற்முறையீடு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசுகளின் மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய 'பத்மாவத்' இன்னும் சிக்கலைச் சந்தித்து வருவது திரையுலகில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Sanjay Leela Bhansali's 'Padmaavat' movie will be reelased on January 25. In this scenario, Thousands of women in Rajasthan have warned that, If Padmaavat film released, those jump into fire. So, Rajasthan and Madhya Pradesh governments have appealed in supreme court to ban 'Padmaavat'.

Recommended