பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக சட்டசபையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்- வீடியோ

  • 6 years ago
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலையை உடைத்த விவகாரத்தில், சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் சிலையை உடைத்ததாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திவந்த போலீஸார், செந்தில்குமார் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

CRPF Soldier arrested for damaging Periyar Statue at Pudhukottai. Later on Police investigation he accepted that and he did that under the influence of Alcohol.

Recommended